அம்பாறை, உகன பிரதேசத்தில் நேற்று இடம்பெற்ற கூட்டமொன்றில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உரையாற்றிய போது தன்னை விமர்சித்தமை தொடர்பில் பொலிஸ் மா அதிபருக்கு பாராளுமன்ற உறுப்பினர் ஹரீன் பெர்னாண்டோ இன்று (10) ஞாயிற்றுக்கிழமை கடிதமொன்றை எழுதியுள்ளார்.
இந்த உரையின் காரணமாக தனது பாதுகாப்பு தொடர்பில் அதிகம் கவனம் செலுத்துமாறு குறித்த கடிதத்தில் ஹரீன் பெர்னாண்டோ கோரிக்கை விடுத்துள்ளார்.
நேற்று அம்பாறையில் இடம்பெற்ற நிகழ்வில் கருத்து தெரிவித்த ஜனாதிபதி 'எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ஹரின் பெர்னாண்டோ சமீபத்தில் நாடாளுமன்றத்தில் ஆற்றிய உரையையும் விமர்சித்தார்.
'நான் நந்தசேனா கோட்டாபய, இது ஒரு நல்ல பெயர். எனது கதாபாத்திரத்திற்கு இரண்டு பக்கங்களும் உள்ளன.
நான், முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்சவாகவே இருக்க வேண்டும் என சில தேரர்கள் விரும்புகின்றனர்.
அத்துடன், நான் கொஞ்சம் கடினமாக இருக்க வேண்டும் என்றும் சொல்கிறார்கள், அந்த கதாபாத்திரங்களில் ஒன்றைச் செயல்படுத்த நான் தயாராக இருக்கிறேன்.
நான் எதற்கும் தயாராக இருக்கிறேன். எவ்வாறாயினும், மக்களின் பிரச்சினைகளைத் தீர்ப்பதன் மூலம் மக்களுக்காக உழைக்க விரும்புவதாக' ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.









No comments