Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

இலங்கை அணியை வீழ்த்தியது பங்களாதேஷ் அணி!


இலங்கை அணிக்கெதிரான முதலாவது ஒருநாள் போட்டியில், பங்களாதேஷ் கிரிக்கெட் அணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் 1-0 என்ற கணக்கில் பங்களாதேஷ் அணி முன்னிலைப் பெற்றுள்ளது.

டாக்கா மைதானத்தில் நேற்று (ஞாயிற்றுக்கிழழமை) நடைபெற்ற இப்போட்டியில், நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற பங்களாதேஷ் அணி, முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்தது.

இதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, நிர்ணயிக்கப்பட்ட 50 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகள் இழப்புக்கு 257 ஓட்டங்களை பெற்றுக்கொண்டது.

இதில் அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, முஷ்பிகுர் ரஹீம் 84 ஓட்டங்களையும் மொஹமதுல்லா 54 ஓட்டங்களையும் டமீம் இக்பால் 52 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

இலங்கை அணியின் பந்துவீச்சில், தனஞ்சய டி சில்வா 3 விக்கெட்டுகளையும் துஸ்மந்த சமீர, குணதிலக்க மற்றும் சந்தகன் ஆகியோர் தலா 1 விக்கெட்டினை வீழ்த்தினர்.

இதனைத்தொடர்ந்து 258 என்ற வெற்றி இலக்கை நோக்கி பதிலுக்கு களமிறங்கிய இலங்கை அணி, 48.1 ஓவர்கள் நிறைவில் 224 ஓட்டங்களுக்கு சுருண்டது. இதனால் பங்களாதேஷ் அணி 33 ஓட்டங்களால் வெற்றிபெற்றுள்ளது.

இதன்போது அணியின் அதிகப்பட்ச ஓட்டங்களாக, வனிந்து ஹசரங்க 74 ஓட்டங்களையும் குசல் பெரேரா 30 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.

பங்களாதேஷ் அணியின் பந்துவீச்சில், மெயிடி ஹசன் 4 விக்கெட்டுகளையும் முஷ்டபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளையும் மொஹமட் சயூப்பூதின் 2 விக்கெட்டுகளையும் சகிப் அல் ஹசன் 1 விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இப்போட்டியின் ஆட்டநாயகனாக, 87 பந்துகளில் 1 சிக்ஸர் 4 பவுண்ரிகள் அடங்களாக 84 ஓட்டங்களை பெற்றுக்கொண்ட முஷ்பிகுர் ரஹீம் தெரிவுசெய்யப்பட்டார்.

இரு அணிகளுக்கிடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி, நாளை டாக்கா மைதானத்தில் நடைபெறவுள்ளது.

No comments