நடிகர் மாதவனின் மகன் வேதாந்த், ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருவதால் அவர் துபாய்க்கு குடிபெயர்ந்துள்ளதாக அறிவித்துள்ளார்.
இது குறித்து கருத்து வெளியிட்டுள்ள அவர், ”வேதாந்த் 2026 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகி வருகிறார்.
அவர் பயிற்சி பெறுவதற்கு உரிய நீச்சல் குளங்கள் தேவை. ஆனால் மும்பையில் உள்ள நீச்சல் குளங்கள் அனைத்தும் கொரோனா காரணமாக மூடப்பட்டிருக்கின்றன.
அதனால் அவர் பயிற்சி பெறுவதற்கு ஏதுவாக நானும், என் மனைவியும் துபாயில் குடியேறியுள்ளோம். எங்கள் மகன் உலகம் முழுவதும், நடைபெறும் பல நீச்சல் சாம்பியன்ஷிப் போட்டிகளில் பங்கேற்று பதக்கங்களை வென்று எங்களுக்கு பெருமை சேர்த்துள்ளார்” எனத் தெரிவித்துள்ளார்.
No comments