Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

வீணாய்ப் போன மன்னருக்கெதிராய் மக்கள் புரட்சி வெடிக்குதே ...


ஜனாதிபதிக்கு எதிராக தலைநகரம் உட்பட நாட்டின் பல பாகங்களிலும் போராட்டங்கள் கிளர்ந்த நிலையில் ஆர்ப்பாட்டமே இல்லாமல் யாழ்ப்பாணத்திலிருந்து ஒரு பாடல் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்று சமூக ஊடகங்கள் , இணையங்களில் வைரலாகி உள்ளது. 


இலங்கை அனுராதபுர இராஜ்யத்தின் இறுதி மன்னனும் இலங்கை வரலாற்றில் மிக மோசமாக வர்ணிக்கப்படும் மன்னருமாகிய ஐந்தாம் மகிந்தன் என்பவர் எவ்வாறு சோழரிடம் நாட்டையும் ராஜ்யத்தையும் தாரை வார்த்தார் என்பதை வில்லுப்பாட்டுடன் இணைத்து கூறுகிறது இந்த பாடல். 


செவி வழி மூலமும் பாடப்புத்தகங்களிலும், ஒரு சில ஆராய்ச்சி முடிவுகளையும் வைத்து  வரலாற்றில் புனையப்பட்ட உண்மைக்கதைகளை அடிப்படையாக்கி  இப்பாடலின் கரு உருவாக்கப்பட்டுள்ளது என பாடல் குழு பாடல் பற்றி குறிப்பிட்டுள்ளனர். 

இருந்த போதிலும் தற்கால அரசியல் நிலமையுடன் பாடலை இணைத்து பார்க்காமல் இருக்க முடியவில்லை என பலரும் கருத்து தெரிவித்துள்ளனர். 

பூவன் மீடியா மூலமும் "புத்தி கெட்ட மனிதரெல்லாம்" எனும்  திரைப்படம் மூலமும் பிரபலமான இளைஞர்கள் இணைந்து இந்த பாடலை தயாரித்துள்ளனர். 

பாடலுக்கான இசை, வரிகள் மற்றும் எண்ணத்தை அமைத்து இசையமைப்பாளர் பூவன் மதீசன் பாடியுள்ளார். 

No comments