வரலாற்று சிறப்பு மிக்க நல்லூர் கந்தசுவாமி ஆலய வருடாந்திர மகோற்சவ 10ஆம் திருவிழா இன்றைய தினம் வியாழக்கிழமை மிக சிறப்பாக நடைபெற்றது.
காலை 10.15 மணியளவில் இடம்பெற்ற வசந்தமண்டப பூஜையை தொடர்ந்து முத்துக்குமார சுவாமி கைலாய வாகனத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருட்காட்சி அளித்ததுடன் , உள் வீதியுலா வந்தார்.
மாலை திருமஞ்ச திருவிழா இடம்பெறவுள்ளது.