அகில இலங்கைப் பாடசாலைகளுக்கு இடையிலான 17 வயதுப் பெண்கள் உதைபந்தாட்டடப் போட்டியில் தெல்லிப்பழை மகாஜனக் கல்லூரி சாம்பியனாகியது.
கொழும்பு களணி பிரதேச சபை மைதானத்தில் இன்றைய தினம் வியாழக்கிழமை நடைபெற்ற 17 வயது பெண்கள் பிரிவு இறுதிப் போட்டியில் பொலனறுவை பன்டிவெவ மகா வித்தியாலயம் தெல்லிப்பழை மகாஜன கல்லூரி அணிகள் மோதின.
தெல்லிப்பழை மகாஜன 2:0 என்ற கோல் கணக்கில் வெற்றிபெற்று சம்பியனாகியது.
இரண்டு கோல்களையும் அணித்தலைவி லயன்சிகா முதல்பாதி ஆட்டநேரத்தில் உதைத்து வெற்றியை உறுதிப்படுத்தினார்.
No comments