Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

கைவிடப்பட்ட இரண்டாவது ஒருநாள் போட்டி


இலங்கை மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான இரண்டாவது ஒருநாள் போட்டி கைவிடப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

இன்றைய போட்டி கண்டி, பல்லேகெல விளையாட்டரங்கில் இடம்பெற்றது.

போட்டியின் நாணய சுழற்சியை வென்ற ஆப்கானிஸ்தான் அணி முதலில் துடுப்பெடுத்தாட தீர்மானித்துள்ளது.

அதனடிப்படையில் முதலில் களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணி 48.2 ஓவர்கள் நிறைவில் சகல விக்கெட்களையும் இழந்து 228 ஓட்டங்களை பெற்றுக் கொண்டது.

துடுப்பாட்டத்தில் ஆப்கானிஸ்தான் அணி சார்ப்பில் ரஹ்மனுல்ல குர்பாஸ் 68 ஓட்டங்களையும் ரஹ்மத் ஷா 58 ஓட்டங்களையும் அதிகபட்சமாக பெற்றுக் கொண்டனர்.

பந்து வீச்சில் கசுன் ராஜித 3 விக்கெட்களையும், மஹீஷ் தீக்ஷன மற்றும் லஹிரு குமார ஆகியோர் தலா 2 விக்கெட்களையும் வீழ்த்தியிருந்தனர்.

அதனடிப்படையில் இலங்கை அணிக்கு 229 ஓட்டங்கள் வெற்றியிலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி 2.4 ஓவர்கள் நிறைவில் 10 ஓட்டங்கள் எடுத்திருந்த நிலையில் போட்டி மழை காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டது.

இதனையடுத்து தொடர்ந்து மழை பெய்து வருவதினால் இன்றைய போட்டியை கைவிட தீர்மானக்கப்பட்டது

அதனடிப்படையில் இன்றைய போட்டி வெற்றி தோல்வியின் நிறைவடைந்துள்ளது.

No comments