Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கேதீஸ்வரம் கொடியேற்றம் நாளை - யாழில் இருந்து எடுத்து செல்லப்பட்ட கொடிச்சீலை


வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலய வருடாந்த பெருந்திருவிழாவுக்கான கொடிச்சீலை யாழ்ப்பாணத்திலிருந்து திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு இன்றைய தினம் வெள்ளிக்கிழமை எடுத்துச் செல்லப்பட்டது.

கொடிச்சீலை உபயகாரரான திருநெல்வேலி கென்னடி வீதியைச் சேர்ந்த சண்முகநாதன் கபிலன் வீட்டிலிருந்து கொடிச்சீலை எடுத்து செல்லப்பட்டு திருநெல்வேலி வெள்ளைப்பிள்ளையார் ஆலயத்தில் வைக்கப்பட்டு அங்கு சிறப்புப் பூஜை வழிபாடுகள் இடம்பெற்றன.

அதனைத் தொடர்ந்து திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு கொடிச்சீலை வாகனத்தில் எடுத்து செல்லப்பட்டது.

திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்தப் பெருந்திருவிழா நாளை சனிக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகின்றது.

1982ஆம் ஆண்டிற்கு முன்னர்  யாழ்ப்பாணத்திலிருந்தே செங்குந்த மரபினரால் திருக்கேதீஸ்வரம் ஆலயத்துக்கு கொடிச்சீலை வழங்கப்பட்டிருந்த நிலையில் யுத்த காலத்தில் அந்த முறை கைவிடப்பட்டிருந்தது.

2022ஆம் ஆண்டு திருக்கேதீஸ்வர ஆலய கும்பாபிஷேகம் இடம்பெற்றிருந்த நிலையில், சுமார் 40 வருடங்களுக்குப் பின்னர் 3ஆவது முறையாகவும்  இம்முறை கொடிச்சீலை வழங்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments