கொழும்பின் சில பகுதிகளுக்கு இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 9 மணி தொடக்கம் 15 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கொழும்பு மாநகர சபையினால் முன்னெடுக்கப்படும் நகர அபிவிருத்தி திட்டத்தின் கீழ், நீர்க்குழாய் திட்டத்தை விரிவாக்கும் நடவடிக்கைகளினால் குறித்த நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.
இதற்கமைய கொழும்பு 2, 3, 7, 8 மற்றும் 10 ஆகிய பகுதிகளில் காலை 9 மணி தொடக்கம் நீர்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாகவும் அவ்வமைச்சு தெரிவித்துள்ளது.
இதேவேளை காலை 9 மணி முதல் நள்ளிரவு 12 மணி வரையான குறித்த காலப்பகுதிக்குள், கொழும்பு 1 இல் குறைந்த அழுத்தத்துடன் நீர் விநியோகிக்கப்படும் எனவும் தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை சுட்டிக்காட்டியுள்ளது.
No comments