ஹங்வெல்லை- எலமலவல பகுதியில் நேற்று (12) இரவு துப்பாக்கிச் சூடு சம்பவமொன்று பதிவாகியுள்ளது.
ஓட்டோ சாரதி மீது, மோட்டார் சைக்கிளில் வந்த நபரொருவர் துப்பாக்கிச் சூடு நடத்தி தப்பிச் சென்றுள்ளாரென, பொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த வெலிபில்லேவ பகுதியைச் சேர்ந்த 34 வயதுடைய நபர், அவிசாவளை வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில், ஹங்வெல்லை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
No comments