இணுவில் பகுதியில் தங்கியிருந்த தமிழகத்தை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் கடந்த முதலாம் திகதி தமிழகம் திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளதாக யாழிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது.
குறித்த செய்தியின் அடிப்படையில் , வடமாகாண சுகாதார பணிமனையினர் , வியாபாரியுடன் யாழில் தொடர்பினை பேணியவர்கள் என அடையாளம் காணப்பட்ட 13 பேரை தனிமைப்படுத்தி , அவர்களுக்கும் கொரோனோ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , அவர்களுக்கு தொற்று இல்லை என மருத்துவ அறிக்கை கிடைக்க பெற்ற போதிலும் , அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இந்நிலையிலையே குறித்த வியாபாரிக்கு கொரொனோ தொற்று இல்லை என தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனோ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் திண்டுக்கல்லில் உள்ள தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார்.
No comments