Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

தமிழக வியாபாரிக்கு கொரோனோ இல்லை.


யாழ். இணுவில் பகுதியில் நீண்ட காலமாக தங்கியிருந்த நிலையில் , தமிழகம் திரும்பியவருக்கு கொரோனோ தொற்று இல்லை என மருத்துவ பரிசோதனைகள் மூலம் உறுதி செய்யப்பட்டுள்ளது. 

இணுவில் பகுதியில் தங்கியிருந்த தமிழகத்தை சேர்ந்த கணேஷ் பாபு என்பவர் கடந்த முதலாம் திகதி தமிழகம் திரும்பிய நிலையில் அவருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளதாக யாழிலிருந்து வெளிவரும் பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது. 

குறித்த செய்தியின் அடிப்படையில் , வடமாகாண சுகாதார பணிமனையினர் , வியாபாரியுடன் யாழில் தொடர்பினை பேணியவர்கள் என அடையாளம் காணப்பட்ட 13  பேரை தனிமைப்படுத்தி , அவர்களுக்கும் கொரோனோ பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு , அவர்களுக்கு தொற்று இல்லை என மருத்துவ அறிக்கை கிடைக்க பெற்ற போதிலும் , அவர்கள் தனிமைப்படுத்தப்பட்டனர். 

இந்நிலையிலையே குறித்த வியாபாரிக்கு கொரொனோ தொற்று இல்லை என தமிழகத்தில் மேற்கொள்ளப்பட்ட கொரோனோ பரிசோதனை மூலம் உறுதிப்படுத்தப்பட்ட நிலையில் அவர் திண்டுக்கல்லில் உள்ள தனது குடும்பத்துடன் இணைந்துள்ளார். 

No comments