Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொரோனா உயிரிழப்பு 160ஆக உயர்வு!



 இலங்கையில் மேலும் மூவர் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.

78 வயதுடைய ஆண் ஒருவரும் 50 மற்றும் 43 வயதுகளையுடைய பெண்கள் இருவருமே இவ்வாறு கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.

அதன்படி கொலன்னாவ பிரதேசத்தை சேர்ந்த 50 வயதுடைய பெண் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் டிசம்பர் 14ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்புக்கான காரணம் சிறுநீரகம் செயலிழப்பு மற்றும் கொவிட் நிமோனியா நிலை  எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேநேரம், கொழும்பு 9ஐச் சேர்ந்த 78 வயதுடைய ஆண் ஒருவர் கொழும்பு IDH வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்ற வந்த நிலையில் நேற்று முன்தினம் உயிரிழந்துள்ளார்.

இரத்தம் நஞ்சானமை உறுப்புக்கள் செயலிழப்பு மற்றும் கொவிட் நிமோனியா நிலை என்பன உயிரிழப்புக்கான காரணம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பண்டாரகம பகுதியைச் சேர்ந்த 43 வயதுடைய பெண் ஒருவர் ஹோமாகம வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில் நேற்று உயிரிழந்துள்ளார்.

உயிரிழப்புக்கான காரணம் கொவிட் நிமோனியா, இரத்தம் நஞ்சானமை மற்றும் உறுப்புக்கள் செயலிழப்பு எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதனையடுத்து, இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 160 ஆக அதிகரித்துள்ளது.

No comments