நாட்டில் கொரோனா தொற்றுக்கு உள்ளான மேலும் ஐவர் உயிரிழந்துள்ளதாக சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார்.
இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றுக்கு உள்ளாகி உயிரிழந்தோரின் மொத்த எண்ணிக்கை 181 ஆக அதிகரித்துள்ளது.
வெலிக்கடை சிறைச்சாலை கைதியான 68 வயதான ஆண், கொழும்பு 15ஐச் சேர்ந்த 55 வயதான ஆண், தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 77 வயதான ஆண், மக்கொன பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஆண், கொழும்பு 10ஐச் சேர்ந்த 83 வயதான ஆண் ஆகியோரே இவ்வாறு கொரோனா தொற்றால் உயிரிழந்துள்ளனர்.
01.வெலிக்கடை சிறைச்சாலை கைதியான 68 வயதான ஆண் ஒருவர் சிறைச்சாலை வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக டிசம்பர் 17 ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
02.கொழும்பு 15ஐச் சேர்ந்த 55 வயதான ஆண் கொழு ம்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா மற்றும் சிறுநீரக நோயால் டிசம்பர் 19ஆம் திகதி உயிரிழந்துள்ளார்.
03.தர்கா நகர் பகுதியைச் சேர்ந்த 77 வயதான ஆண் கொரோனா தொற்றால் இரத்தம் விஷமானது மற்றும் மாரடைப்பால் டிசம்பர் 18 ஆம் திகதி வீட்டிலே உயிரிழந்துள்ளார்.
04.மக்கொன பகுதியைச் சேர்ந்த 63 வயதான ஆண் கொரோனா தொற்றால் இரத்தம் விஷமானது, நீரிழிவு நோய், உயர் இரத்த அழுத்தம் மற்றும் மாரடைப்பால் 19 ஆம் திகதி வீட்டிலே உயிரிழந்துள்ளார்.
05.கொழும்பு 10 ஐச் சேர்ந்த 83 வயதான ஆண் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றாளர் என அடையாளம் காணப்பட்டதை அடுத்து ஹோமாகம ஆதார வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் கொரோனா தொற்றால் ஏற்பட்ட நிமோனியா காரணமாக 20ஆம் திகதி வீட்டிலே உயிரிழந்துள்ளார்.
இதேவேளை, நாட்டில் மேலும் 370 பேர் கொரோனா தொற்றாளர்களாக நேற்றைய தினம் அடையாளம் காணப்பட்டனர்.
இதனையடுத்து இலங்கையில் கொரோனா தொற்றாளர்களின் மொத்த எண்ணிக்கை 37 ஆயிரத்து 631 ஆக பதிவாகியுள்ளது.
அவர்களில் 28 ஆயிரத்து 682 பேர் பூரண குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 8 ஆயிரத்து 779 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர்.
No comments