வெயாங்கொடயில் இன்று (திங்கட்கிழமை) காலை பொலிஸ் அதிகாரிகளுடன் ஏற்பட்ட மோதலில் பல குற்றங்களுடன் தொடர்புடைய 37 வயதான நபர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த நபர் கொலை சம்பவத்துடன் தொடர்புடையவர் என்ற குற்றச்சாட்டின் கீழ் கடந்த 19ஆம் திகதி கைதுசெய்யப்பட்டிருந்த நிலையில், பொலிஸ் அதிகாரிகள் இன்று காலை வெயாங்கொடயில் உள்ள ஒரு இடத்திற்கு அவரை அழைத்துச் சென்றுள்ளனர்.
இதன் பின்னர் ஏற்பட்ட மோதலில் காயமடைந்த சந்தேகநபர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளார்.
இதேநேரம், இந்த சம்பவத்தில் காயமடைந்த பொலிஸ் கான்ஸ்டபிள் ஒருவர் கம்பஹா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த சந்தேக நபர் மீது மூன்று வழக்குகள் மேல் நீதிமன்றில் விசாரிக்கப்பட்டு வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.









No comments