இலங்கையில் மேலும் சில பகுதிகள் நேற்று (செவ்வாய்க்கிழமை) இரவு முதல் உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டுள்ளன.
அதன்படி களுத்துறை மாவட்டத்தின் தொட்டவத்தவும் மொனராகலை மாவட்டத்தின் படல்கும்புர, அலுபொத ஆகிய பகுதிகளை தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவித்து இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரால் சவேந்திர சில்வா உத்தரவு பிறப்பித்தார்.
குறித்த பகுதிகளில் கொவிட் 19 தொற்று உறுதியானவர்கள் அடையாளங்காணப்பட்டதை அடுத்து இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, நாட்டில் ஏற்கனவே தனிமைப்படுத்தலில் உள்ள பிரதேசங்களின் முழு விபரம்
கொழும்பு மாவட்டத்தில் வெள்ளவத்தை மயூரா பிரதேசம், முகத்துவாரம், கொட்டாஞ்சேனை, கிரேண்ட்பாஸ், ஆட்டுப்பட்டித்தெரு, டேம்வீதி, வாழைத்தோட்டம், தெமடகொடை, மாளிகாவத்தை, மருதானை ஆகிய பொலிஸ் அதிகாரப் பிரிவுகளும் கொம்பனித்தெருவின் வேகந்த கிராமசேவகர் பிரிவும் பொரளையில் உள்ள வனாத்தமுல்லை கிராமசேவகர் பிரிவும் வெல்லம்பிட்டியில் உள்ள சாலமுல்ல கிராமசேவகர் பிரிவும் லக்சந்த செவன வீட்டுத்திட்டம் என்பனவும் தனிமைப்படுத்தப்பட்ட பிரதேசங்களாக அறிவிக்கப்பட்டன.
அதேபோல கம்பஹா மாவட்டத்தில் பேலியகொடை பொலிஸ் அதிகார பிரிவுக்கு உட்பட்ட பேலியகொடவத்த, பேலியகொட கங்கபட, மீகஹாவத்த ஆகிய கிராம சேவகர் பிரிவுகள் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளன.
கிரிபத்கொடை பொலிஸ் அதிகார பிரிவில் வெலேகொட வடக்கு பகுதியும் நீர்கொழும்பு பொலிஸ் அதிகார பிரிவிற்கு உட்பட்ட எம்.சி.குடியிருப்பு தொகுதி மற்றும் வெயாங்கொடை பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட ஹிரிப்பிட்டிய தெற்கு கிராம சேவகர் பிரிவுகளும் தொடர்ந்தும் தனிமைப்படுத்தலில் உள்ளன.
ஹுணுப்பிட்டி வடக்கு கிராம சேவகர் பிரிவுக்கு உபட்ட வெலிகந்த பகுதியும் நிட்டம்புவ பொலிஸ் அதிகார பிரிவுக்கு உட்பட்ட திஹாரி வடக்கு மற்றும் திஹாரி கிழக்கு கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட வாரன பன்சல வீதி, கத்தோட வீதி மற்றும் இன்ரா மாவத்தை பகுதிகளும் தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளாக அறிவிக்கப்பட்டன.
வத்தளை பொலிஸ் அதிகார பிரிவுக்கு உட்பட்ட கெரவலபிட்டிய கிராம சேவகர் பிரிவிலுள்ள நைதுவ பகுதியும் வெலிகடமுல்ல கிராம சேவகர் பிரிவுக்கு உட்பட்ட துவே வத்த பகுதியும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அத்துடன் பேலியகொடை பொலிஸ் அதிகார பிரிவுக்கு உட்பட்ட பட்டியமுல்ல கிராம சேவகர் பிரிவிலுள்ள ரோஹனவீர மாவத்தை பகுதியும் தற்போதும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
இதேவேளை களுத்துறை மாவட்டத்தில் புலத்சிங்க பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட வேகங்கல்ல கிழக்கு மற்றும் வேகங்கல்ல மேற்கு கிராம சேவகர் பிரிவுகள் சிறிய ஹீனிடியங்கல கிராம சேவகர் பிரிவும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளன.
அதேநேரம், கொழும்பு, கம்பஹா, களுத்துறை அல்லாத நாட்டின் ஏனைய மாவட்டங்களில் தற்போது தனிமைப்படுத்தப்பட்டுள்ள இடங்கள் மறு அறிவித்தல் வரையில் அவ்வாறே பேணப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது
No comments