Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வட்டுக்கோட்டையில் பெண் உயிரிழப்பு - குருதி மாதிரிகள் கொழும்புக்கு அனுப்பிவைப்பு



வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட அராலி கிழக்கைச் சேர்ந்த பெண் ஒருவர் திடீரென் மயங்கிச் சரிந்த நிலையில்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உயிரிழந்துள்ளார். 

அவரது உயிரிழப்புக் காரணம் தொடர்பில் கண்டறிவதற்கு குருதி மாதிரிகள் பெறப்பட்டு கொழும்புக்கு அனுப்பப்பட்டுள்ளன.

அராலி கிழக்கைச் சேர்ந்த  2 பிள்ளைகளின் தாயுமான மதுசன் பிரபாகினி (வயது 29) என்பவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.

கடந்த 7ஆம் திகதி அவர், வீடு பெருக்கிக் கொண்டிருக்கும் போது மயங்கிச் சரிந்துள்ளார். 

உடனடியாக யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு அதிதீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை வழங்கப்பட்டது.

7 நாள்களின் பின்னர் அவர் இன்று ஞாயிற்றுக்கிழமை காலை உயிரிழந்துள்ளார். அவரது உயிரிழப்புக்கான காரணத்தை கண்டறிவதற்கு குருதி மாதிரிகள் பெறப்பட்டு கொழும்புக்கு அனுப்பிவைக்கப்பட்டுள்ளன.

No comments