Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நெடுந்தீவுக் கடற்பரப்பில் காணாமல்போன மீனவர்களில் ஒருவரின் சடலம் கண்டெடுப்பு!



குறிகாட்டுவானில் இருந்து நெடுந்தீவு நோக்கிப் படகில் பயணித்த மீனவர்கள் இருவர் காணாமற்போயிருந்த நிலையில் ஒருவரது சடலம் நயினாதீவு கடற்பரப்பில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அவர்களைத் தேடி இரண்டு நாட்களாக தேடுதல் பணி முன்னெடுக்கப்பட்ட பணியில், நயினாதீவு முனைக் கடலிலேயே ஒருவரின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது.

குறிகட்டுவானிலிருந்து ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் 1.45 மணிக்கு நெடுந்தீவுக்குத் திரும்பிய மீனவர்கள் இருவரே இவ்வாறு காணாமற்போயிருந்தனர்.

நெடுந்தீவு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் (வயது-20), நெடுந்தீவு 10ஆம் வட்டாரத்தைச் சேர்ந்த றொபின்சன் (வயது-40) ஆகிய இருவருமே காணாமற்போயிருந்தனர்.

அவர்களில் நெடுந்தீவு ஆறாம் வட்டாரத்தைச் சேர்ந்த மரியநாயகம் அமலன் மேயன் என்ற இளைஞனின் சடலம் கண்டெடுக்கப்பட்டுள்ளது. மற்றையவரைத் தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்படுவதாக நெடுந்தீவுப் பொலிஸார் தெரிவித்துள்ளனர்

No comments