மின்சாரத்திற்கான கேள்வியை பூர்த்தி செய்வதற்காக, மேலதிகமாக மின்சாரத்தை கொள்வனவு செய்வதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
மின்சக்தி அமைச்சின் ஊடகப்பேச்சாளர் சுலக்ஷன ஜனயவர்தன இதனைத் தெரிவித்துள்ளார்.
இதற்கான அனுமதியை பெற்றுக் கொள்வதற்காக, குறித்த யோசனை இலங்கை பொது பயன்பாட்டு ஆணைக்குழுவிடம் முன்வைக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன் கீழ் 128 மெகா வாட் மின்சாரம் கொள்வனவு செய்யப்படவுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
No comments