Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

டாம் வீதியில் மீட்கப்பட்ட சடலம் அடையாளம் காணப்பட்டது - கொலை சந்தேகநபர் தற்கொலை!


 

கொழும்பு – டேம் வீதியில் சடலமாகக் கண்டெடுக்கப்பட்ட பெண்ணின் கொலையுடன் தொடர்புடைய சந்தேகநபரான உப பொலிஸ் பரிசோதகர் படல்கும்புர ஐந்தாம் கட்டைப் பகுதியில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.

அவர் 52 வயதுடைய புத்தளம்  பொலிஸ் நிலையத்தில் கடமையாற்றிய உப பொலிஸ் பரிசோதகர் என விசாரணையில் தெரியவந்துள்ளது.

அத்துடன் குறித்த நபர் விஷமருந்தி உயிரிழந்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்தார்.

இதேநேரம், இந்த சம்பவத்தில் உயிரிழந்த பெண் குருவிட்ட பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய திருமணமாகாத பெண் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.

No comments