Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஊழல் மோசடி விசாரணை அறிக்கையை சமர்ப்பிக்க அனுமதி!



அரச நிறுவனங்களில் கடந்த அரசாங்க காலகட்டத்தில் இடம்பெற்றதாக கூறப்படும் ஊழல் மோசடி தொடர்பாக விசாரணை செய்வதற்காக நியமிக்கப்பட்ட ஜனாதிபதி ஆணைக்குழுவின் அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.

அமைச்சரவை கூட்டம் நேற்று (திங்கட்கிழமை) இரவு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தலைமையில் இடம்பெற்றது. இதன்போதே அறிக்கையை சமர்ப்பிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில் எதிர்வரும் நாடாளுமன்ற அமர்வின்போது குறித்த அறிக்கையை நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்து விவாதத்திற்கு உட்படுத்தப்படவுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அத்துடன், அரசியல் பழிவாங்கல் தொடர்பிலான ஆணைக்குழுவின் அறிக்கையும் குறித்த நாடாளுமன்ற அமர்வின்போது விவாதத்திற்கு எடுத்துக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

No comments