தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக இருக்கும் விஷ்ணு விஷால் மனிதர்களைப் பார்த்துத்தான் பயப்படுவதாக தெரிவித்துள்ளார்.
அண்மையில் இடம்பெற்ற திரைப்பட விழாவொன்றில் கலந்துகொண்ட அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவித்த அவர், “யானைகளைப் பார்த்து சின்ன வயதில் நான் அதிகம் பயப்படுவேன். படத்தில் நடிச்சிருக்கிற யானையை முதன் முறை பார்க்கும் போதும் கொஞ்சம் பயம் இருந்தது.
கடைசி மூன்று வருசமா என் வாழ்க்கைல நடக்கிறத பார்க்கும் போது மனிதர்களைப் பார்த்துத்தான் நாம் பயப்பட வேண்டும் என புரிந்துகொண்டேன். யானைகள் கூட பாசமாகத்தான் இருக்கின்றன. மனிதர்கள் அப்படி இல்லை.
என்னுடைய அனுபவத்தில் இதைச் சொல்கிறேன். யானைகளுக்கு நினைவாற்றல் அதிகம். மனுசங்க எல்லாத்தையும் சீக்கிரம் மறந்துறாங்க. யானையா மனிதனா என்று கேட்டால் யானை என்று தான் நான் சொல்லுவேன்’ எனக் கூறியுள்ளார்.
No comments