Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்.நகர சந்தை தொகுதி ; தொற்றாளர்கள் 117ஆக அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் மாநகர சந்தைக் கடைத்தொகுதி வர்த்தகர்கள் மற்றும் பணியாளர்களில் மேலும் 13 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று புதன்கிழமை கிடைத்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
www.tamilnews1.com 
இதன்மூலம் யாழ்ப்பாணம் மாநகரில் கருவாட்டுக் கடை உரிமையாளர் ஒருவர் கோரோனா வைரஸ் தொற்றுடன் கண்டறியப்பட்டதையடுத்து  யாழ்.நகர சந்தை தொகுதியில் 117 பேர் இன்று முற்பகல் வரை அடையாளப்படுத்தப்பட்டுள்ளனர் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
www.tamilnews1.com 
யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் 541 பேரின் மாதிரிகள் முள்ளேரியா ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கட்டன.  அவற்றில் 13 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டு இன்று காலை அறிக்கை கிடைத்துள்ளது.

யாழ்ப்பாணம் மாநகர வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்கள் ஆயிரத்து 440 பேரிடம் கடந்த ஞாயிறு மற்றும் திங்கட்கிழமை இரண்டு நாள்களில் பெறப்பட்டன.www.tamilnews1.com 

அவற்றில் இதுவரை ஒரு தொகுதி பரிசோதனைக்கு உட்படுத்தப்பட்ட போது ,  35 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 ஏனையவர்களின்  மாதிரிகள் இன்று யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வுகூடம் மற்றும் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடங்களில் பரிசோதனைக்கு  உள்படுத்தப்படுகின்றன. 
www.tamilnews1.com 
அதன் பெறுபேறுகள் இன்றிரவு கிடைக்கும். அத்துடன் ஆயிரத்து 440 பேரின் பரிசோதனை முடிவுகளும் முழுமைப்படுத்தப்படும் என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

No comments