Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பிரதமர் தலைமையில் ‘அம்மாவருனே' பொழுதுபோக்கு நிகழ்ச்சித்திட்டம்

நல்லொழுக்கமுள்ள  சிறந்த தலைமுறையை உருவாக்குவதற்கு நல்ல பெற்றோரை உருவாக்குவதற்காக ஏற்பாடு செய்யப்பட்ட 'அம்மாவருனே' ('தாய்மார்களே') பொழுதுபோக்கு நிகழ்ச்சித்திட்டம் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று (08) சுதந்திர சதுக்கத்தில் நடைபெற்றது.

 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடுபாலர் மற்றும் ஆரம்ப கல்விபாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்த  சில்வாவின்எண்ணக்கருவிற்கமைய இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டது. 

 

சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு மக்கள் வங்கியால் அறிமுகப்படுத்தப்பட்ட 'வனிதா வாசனாவங்கி அட்டையும் இந்நிகழ்வின்போது பிரதமரினால் வெளியிடப்பட்டதுடன், 'வனிதா வாசனாவங்கி அட்டை பிரதமருக்கு வழங்கி வைக்கப்பட்டது. 


இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் பியல் நிஷாந்தமக்கள் வங்கியின் தலைவர் சுஜீவ ராஜபக்ஷ உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

 

மேலும்கல்வி அமைச்சர் பேராசிரியர் ஜி.எல். பீரிஸ் இதன்போது பாடசாலைகளுக்கு கிருமிநாசினிகள் மற்றும் சுகாதாரப் பொருட்கள் என்பவற்றை வழங்கி வைத்தார்.

 

நாராஹேன்பிட அபயராமாதிபதி மேல் மாகாண பிரதான சங்கநாயக்கர் முருத்தேட்டுவே ஆனந்த நாயக்க தேரர் உள்ளிட்ட மஹா சங்கத்தினரும் இந்நிகழ்வில் பங்கேற்றிருந்ததுடன்,


குறித்த நிகழ்வில் கௌரவ பிரதமரின் பாரியார் திருமதி.ஷிரந்தி ராஜபக்ஷஅமைச்சர்களான பேராசிரியர் ஜி.எல். பீரிஸ்தினேஷ் குணவர்தனஇராஜாங்க அமைச்சர்கள்நாடாளுமன்ற உறுப்பினர்கள்பெண்கள் மற்றும் குழந்தைகள் மேம்பாடுமுன்பள்ளி மற்றும் ஆரம்ப கல்விபாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்வி சேவைகள் இராஜாங்க அமைச்சின் செயலாளர் ஸ்ரீயானி குமாரி  ஜயசேகர மற்றும் பெற்றோர்,  பிள்ளைகள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 



 

No comments