இயக்குநர் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் பழனிவேல் தயாரிப்பில் மீண்டுமொரு திரைப்படம் உருவாகவுள்ளது.
15 ஆண்டுகளுக்குப் பின்னர், குறித்த தயாரிப்பாளர் மற்றும் இயக்குநர் இணைந்துள்ள புதிய திரைப்படத்திற்கு ‘ரஜினி’ என பெயரிடப்பட்டுள்ளது.
இந்தப் படத்தில் நாயகனாக விஜய் சத்யா என்பவர் நடிக்கவுள்ளார். அத்துடன், மனோ நாராயணன் ஒளிப்பதிவில், அம்ரிஷ் இசையில் தியாகராஜன் படத்தொகுப்பில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு இன்று முதல் தொடங்குவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த 2006ஆம் ஆண்டில் ஏ.வெங்கடேஷ் இயக்கத்தில் பழனிவேல் தயாரிப்பில் அக்சன் கிங் அர்ஜுன் நடித்து வெளியான ‘வாத்தியார்’ திரைப்படம் நல்ல வெற்றியைப் பெற்றது.
இந்நிலையில், இந்தக் கூட்டணியிலான புதிய படத்தின் மீதான எதிர்பார்ப்பு இரசிகர்களிடையே அதிகரித்துள்ளது
No comments