Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

குரலற்றவர்களின் குரலாக ஒலித்த குரல் மௌனித்தது!

மன்னார் மறை மாவட்டத்தின் முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை, (80 வயது) இன்று (வியாழக்கிழமை) சுகயீனம் காரணமாக உயிரிழந்துள்ளார் என மன்னார் மறைமாவட்ட குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை அடிகளார்  தெரிவித்தார். www.tamilnews1.com 

யாழ்ப்பாணம் திருச்சிலுவை கன்னியர் மருதமடு வைத்தியசாலையில் சிகிச்சைப் பெற்று வந்த நிலையில், இன்று காலை 6.30 மணியளவில், சிகிச்சைப் பலனின்றி உயிரிழந்துள்ளார். www.tamilnews1.com 

இந்நிலையில் அவரது இறுதி கிரியைகள் தொடர்பாக விபரங்கள் விரைவில் அறிவிக்கப்படுமென குரு முதல்வர் அருட்தந்தை அன்ரனி விக்டர் சோசை  தெரிவித்தார். www.tamilnews1.com 

முன்னாள் ஆயர் இராயப்பு யோசேப்பு ஆண்டகை, ஆயர் பணியில் 25ஆண்டுகளை நிறைவு செய்து வெள்ளி விழா கண்ட போது வீரகேசரி இணையத்தளத்தில் 2017ஆம் ஆண்டு 10மாதம் 20ஆம் திகதி அன்று வெளியான கட்டுரையை நாம் மீள் பிரசுரம் செய்கிறோம். www.tamilnews1.com 

மன்னார் மறைவட்டத்தின் இரண்டாவது ஆயராக 1992ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி திருலைப்படுத்தப்பட்டார். இவர் 16.04.1940 ஆம் ஆண்டு யாழ்ப்பாணம் நெடுந்தீவில் பிறந்தார். நெடுந்தீவு றோ.க. பாடசாலை, முருங்கன் மகா வித்தியாலயம், யாழ். புனித பத்திரிசியார் கல்லூரி ஆகியவற்றில் தனது பாடசாலைக் கல்வியைத் தொடர்ந்தார். www.tamilnews1.com 

கண்டி தேசிய குருமடம், திருச்சி புனித பவுல் குருமடம் ஆகியவற்றில் குருத்துவக் கல்வியைக் கற்று 13.12.1967ஆம் ஆண்டு முன்னாள் யாழ்.ஆயர் எமிலியானுஸ்பிள்ளை ஆண்டகையினால் யாழ். மரியன்னை பேராயத்தில் குருவாகத் திருலைப்டுத்தப்பட்டார். www.tamilnews1.com 

1992 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6 ஆம் திகதி முன்னாள் பாப்பரசர் இரண்டாம் அருளப்பர் சின்னப்பரால் மன்னார் மறைமாவட்டத்தின் ஆயராக நியமனம் பெற்றார். 1992ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 20ஆம் திகதி ஓய்வுநிலை ஆயர் தோமஸ் சௌந்தரநாயகம் ஆண்டகை உட்பட இலங்கையின் ஏனைய ஆயர்கள் புடைசூழ மருதமடு அன்னை ஆலயத்தில் ஆயராகத் திருப்பொழிவு செய்யப்பட்டார்.

ஆயர் இராயப்பு யோசப்பு ஆண்டகை, தன்னிடம் ஒப்படைக்கப்பட்ட  மறைமாவட்டம் மட்டிலான தனது கடமைகளை செவ்வனே நிறைவேற்றி வந்தார். திருப்பலி, திருவிழாக்கள், பங்குத்தரிசிப்புக்கள், ஆலோசனைகள், கூட்டங்கள், மாநாடுகள், ஆலய மற்றும் பங்குமனைக் கட்டுமானங்கள், ஏழைகளுக்கான உதவிகள் என அவர் தன் கடமைகளை மேற்கொண்டு வந்தார். www.tamilnews1.com 

இவர் மறை மாவட்டத்தைப் பொறுப்பெடுத்தபோது 15 பங்குகள் இருந்தன. இவர் ஓய்வு பெறும் போது 38 பங்குகளாக அவை அதிகரித்திருந்தன.

பம்பைமடுவில் அன்னை திரேசாவின் அருட்சகோதரிகளை வரவழைத்து முதியோர் மற்றும் கைவிடப்பட்டவர்களைப் பராமரிக்க ஒரு இல்லத்தை ஆரம்பித்தார். முருங்கனில் டொன் பொஸ்கோ குருக்களை வரவழைத்து இளைஞர், யுவதிகளுக்கான தொழிற்பயிற்சிகளை வழங்க ஆவன செய்தார். அடம்பனில் இயேசு சபைக் குருக்களை வரவழைத்து அவர்களின் பணி மறைமாவட்டத்திற்கு கிடைக்க வழிசெய்தார். இந்தியாவில் இருந்து பல புதிய பெண் துறவற சபைகளை மன்னார் மறைமாவட்டத்திற்கு வரவழைத்து இந்திய அருட்சகோதரிகளின் பணியை மக்கள் பெற வழிவகுத்தார். மடுத்திருப்பதியில் தியான இல்லம் ஒன்றைக் கட்டியெழுப்பி அதன் மூலம் மன்னார் மறைமாவட்டத்தைச் சேர்ந்தவர்களும் ஏனைய மறைமாவட்டத்தவர்களும் பயன்பெற வழிகோலினார்.

துன்புற்ற மக்களின் துயர் துடைத்தார் www.tamilnews1.com 

ஒரு கொடூரமான போர்ச் சூழலில் பல்வேறு நிலைகளில் துன்பங்களைச் சுமந்து நின்ற மக்களின் துயரங்களைத் துடைக்க அவர் அரும்பாடுபட்டார். சிறைகளில் வாடும் கைதிகளை அவர் அடிக்கடி சென்று பார்வையிட்டு அவர்களின் விடுலைக்காகக் குரல் கொடுத்தார். அவர்ளோடு தனிப்பட்ட தொடர்பாடல்களை வைத்திருந்தார். www.tamilnews1.com 

காணாமலாக்கப்பட்டவர்கள் சார்பாக நின்று அவர்களின் கதியை வெளிக்கொணர ஓயாது உழைத்தார். யுத்தத்தால் தமது வாழ்விடங்களை இழந்தவர்களுக்கு வீடுகளைக் கட்டிக்கொடுக்க முயற்சிகளை மேற்கொண்டார். முள்ளிக்குளத்தில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும், விடத்தல்தீவில் இருந்து இடம்பெயர்ந்த மக்களுக்கும் அவர் காணிகளை, வீடுகளை வழங்கினார்.

யுத்தத்தால் அங்கவீனமானோர்களுக்கு வாழ்வோதய நிறுவனத்தின் உதவிக்கரம் பிரிவு மூலம் உதவிகளைப் புரிந்தார். வவுனியா பம்பைமடுவில் அமைந்துள்ள வரோட் நிறுவனத்தின் ஊடாகவும் இவர்களின் புனர்வாழ்வுக்காகப் பாடுபட்டார். யுத்தத்தாலும், சுனாமியினாலும் பெற்றோரை இழந்து ஆதரவற்று நின்ற பெண் சிறார்களுக்கு வவுனியாவில் சலேசிய அருட்சகோதரிகளின் பராமரிப்பில் இல்லத்தை ஆரம்பித்தார். அதேபோல் மன்னாரிலும் ஆண் சிறார்களுக்கான ஓர் இல்லத்தை ஆரம்பித்தார். இவ்வாறு இன்னும் பல துயர் துடைப்புப் பணிகளை முன்னெடுத்தார். www.tamilnews1.com 

2006 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 17ஆம் திகதி பேசா&லையில் கடற்படையினருக்கு எதிராக இடம்பெற்ற தாக்குதலின் போது இரண்டாயிரத்திற்கும் அதிகமான மக்கள் பேசாலை புனித வெற்றி நாயகி அன்னை ஆலயத்தில் அடைக்கலம் புகுந்திருந்தனர். ஆலயத்தை நோக்கி துப்பாக்கி வேட்டுக்களைத் தீர்த்துக்கொண்டு கடற்படையினர் செல்கின்ற செய்தியை அறிந்த ஆயர் ஆபத்தான அந்தச் சூழ்நிலையில் அன்றைய மன்னார் பிரதேச செயலாளர் திருமதி ஸ்ரான்லி டிமெல் சகிதம் பேசாலைக்கு சென்று நிலைமையைக் கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்தார்.இச்சம்பவம் தொடர்பில் வத்திக்கானுக்கு தகவல்களை அனுப்பினார். www.tamilnews1.com 

2007ஆம் ஆண்டு ஜனவரி 2ஆம் திகதி இலுப்பைக்கடவை படகுத்துறைப் பகுதியில் விமானக் குண்டுத் தாக்கு&தலில் இரண்டு குழந்தைகள் உட்பட 13 அப்பாவிப் பொதுமக்கள் கொல்லப்பட்ட போது அந்தத் தாக்குதல் நடந்த சில மணித்தியாலங்களில் குரு முதல்வர் விக்ரர் சோசை அடிகளாருடன் அந்த இடத்திற்கு சென்று அம் மக்களின் துயரத்தில் பங்கு கொண்டதோடு கொல்லப்பட்டவர்கள் கடற் புலிகள் என்ற அரசின் செய்தியை மறுத்து பொதுமக்கள்தான் கொல்லப்பட்டனர் என்ற செய்தியை உலகத்திற்குத் தெரியப்படுத்தினார். www.tamilnews1.com 

மன்னாரில் 2011 ஜனவரியில் இடம்பெற்ற எல்.எல்.ஆர்.சி அமர்வில் ஆயர் ஏனைய குருக்களோடு இணைந்து மக்களின் பிரச்சனைகளை எழுத்து மூலமாக அறிக்கையாக முன்வைத்தார். காணாமலாக்கப்பட்டவர்கள், தடுத்துவைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க சந்தேக நபர்கள்,   போரினால் பாதிக்கப்பட்டவர்களின் புனர்வாழ்வு போன்ற உடனடியாகத் தீர்க்கப்படவேண்டிய பல விடயங்கள் மற்றும் அரசியல் தீர்வின் அவசியம் போன்ற விடயங்களை அவர் இந்த அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார். வன்னியில் இருந்த மக்களில் 146,679 பேருக்கு என்ன நடந்தது? என்ற கேள்வியை கேட்டு அரசாங்கத்தை ஆட்டம் காண செய்தார்.

2012ஆம் ஆண்டு லக்பிம என்ற சிங்களப் பத்திரிகைக்கு வழங்கிய நேர்காணலில் தன்னைப்பற்றிய பல விமர்சனங்களுக்கு அவர் பதில் அளித்திருந்தார். நீங்கள் சர்ச்சைக்குரிய ஆயர் என அழைக்கப்படுகின்றீர்கள். இதுபற்றிய உங்கள் விளக்கம் என்ன? என்ற கேள்விக்கு அவருடைய பதில், நான் சர்ச்சைக்குரிய ஆயர் என அழைக்கப்படுகின்றேன். ஏனென்றால் சர்ச்சைக்குரிய விடயங்கள் நடைபெறுகின்றன. நான் அந்த விடயங்கள் பற்றிப் பேசும் போது சர்ச்சைக்குரிய ஆளாக மாறுகின்றேன். நான் உண்மையைப் பேசுவதால் வெளிப்படையாகப் பேசும் ஆயர் என்கின்றனர். நான் ஏழைகள் மேல் கரிசனை கொண்டு நீதிக்காகக் குரல் கொடுத்தால் நான் இலங்கைக்கு எதிரானவன், புலிகள் அல்லது பிரிவினைவாதி என்கின்றனர். www.tamilnews1.com

இப்பெயர்களைப்பற்றி நான் அலட்டிக்கொள்வது இல்லை. நான் தொடர்ந்தும் அநீதிக்கு எதிராகக் குரல் எழுப்புவேன். மனித உரிமை மீறல்களுக்கு எதிராகப் போராடுவேன். www.tamilnews1.com 

நீங்கள் விடுதலைப் புலியா? அல்லது அந்த அமைப்பின் தீவிர ஆதரவாளரா? என்ற கேள்விக்கு அவர் அளித்த பதில், நான் ஏன் அவ்வாறு அழைக்கப்படுகிறேன் என்பது எனக்குத் தெரியாது. என்னை அப்படி அழைப்பது அவர்களின் பலவீனம். நான் விடுதலைப் புலிகளின் கொலைகளையும், அட்டூழியங்களையும் ஒருபோதும் ஏற்றுக்கொள்ளவில்லை. நான் அவர்களுடைய கொலைகளைக் கண்டித்திருக்கிறேன். இதனால் கொலை மிரட்டல்களையும் பெற்றிருக்கிறேன். நான் ஒருபோதும் தனிநாட்டை விரும்பவில்லை. எனது கனவில்கூட விரும்பவில்லை. ஒரு குரு என்ற வகையில், உண்மையையும், வாழ்வையும், வழியையும் வெளிப்படுத்தி வன்முறைக்குப் பலியான இயேசுவை பின்பற்றுகிறவன் என்ற வகையில் நான் எனது கடமைகளைச் செய்கின்றேன் என்றார் www.tamilnews1.com 

பணி ஓய்வு www.tamilnews1.com 


1992ஆம் ஆண்டு தொடக்கம் 2015ஆம் ஆண்டு நடுப்பகுதியில் அவர் சுகவீனமடையும்வரை இடைவிடாமல் தொடர்ச்சியாக இயங்கிவந்தார். திருச்சபையின் ஒழுங்குவிதிக்கு அமைய 75 வயது நிறைவில் தான் பணியிலிருந்து ஓய்வுபெறுவதாக திருச்சபைச் சட்ட எண் 401 பகுதி 1 இற்கு அமைவாக பாப்பரசர் பிரான்சிஸிஸ் அறிவித்தார். 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் திகதி இவருடைய பணி ஓய்வுக்கான கோரிக்கையை பாப்பரசர் ஏற்றுக்கொண்டார். www.tamilnews1.com 

2014ஆம் ஆண்டு மன்னார் தமிழ்ச் சங்கத்தினால் முன்னெடுக்கப்பட்ட தமிழ்த்தூது தனிநாயகம் அடிகளார் நூற்றாண்டு விழாவின் நிறைவுநாள் நிகழ்வின்போது மன்னார் தமிழ்ச் சங்கம் "இனமான ஏந்தல்" என்ற விருதை இவருக்கு வழங்கிக் கௌரவித்தது. 2015ஆம் ஆண்டு கொழும்புக் கம்பன் கழகம் இவருக்கு கம்பன் புகழ் விருதினை வழங்கிக் கௌரவித்தது.

www.tamilnews1.com www.tamilnews1.com www.tamilnews1.com www.tamilnews1.com www.tamilnews1.com www.tamilnews1.com www.tamilnews1.com 

No comments