யாழ்ப்பாணத்தில் மேலும் 21 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று செவ்வாய்க்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என்று வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை மற்றும் யாழ்ப்பாணம் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் என இரண்டிலும் 702 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 21 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.
அதில் யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் 8 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. அத்துடன் பருத்தித்துறை வைத்தியசாலை நோயாளர் விடுதியில் மூன்று பேருக்கும் வைத்தியசாலை உத்தியோகத்தர் ஒருவருக்கும் என நால்வருக்கும், உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த ஒருவருக்கும், (அவர் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்)
சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவைச் சேர்ந்த இருவருக்கும் (அவர்கள் ஏற்கனவே சுயதனிமைப்படுத்தப்பட்டிருந்தவர்
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்ற மூவருக்கும் என 21 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
இதேவேளை, யாழ்ப்பாணம் மாநகரில் சந்தை மற்றும் கடைத் தொகுதிகளைச் சேர்ந்த 460 பேரின் மாதிரிகள் முள்ளேரியா ஆய்வுகூடத்துக்கு அனுப்பிவைக்கப்பட்டன. அவற்றின் பிசிஆர் பரிசோதனை அறிக்கைக்காக காத்திருப்பதாகவும் தெரிவித்தார்.
No comments