யாழ்.திருநெல்வேலி சந்தை மற்றும் சந்தையை சூழவுள்ள வர்த்தக நிலையங்களில் பெறப்பட்ட பீ.சி.ஆர் மாதிரிகளின் பரிசோதனை முடிவுகள் வெளியானதன் பின்பே சந்தை, கண்காணிப்பு வலையமாகவுள்ள பாற்பண்ணை பகுதிகளை மீள திறப்பது தொடர்பான தீர்மானம் எடுக்கப்படும் என மாகாண சுகாதார பணிப்பாளர் வைத்திய கலாநிதி ஆ.கேதீஸ்வரன் கூறியுள்ளார்.
மிக விரைவில் 2ம் கட்ட பீ.சி.ஆர் பரிசோதனை சந்தை வர்த்தகர்கள் மற்றும் சந்தையை சூழவுள்ள வர்த்தக நிலைய உரிமையாளர்கள் மற்றும் பணியாளர்களிடம் மேற்கொள்ளப்பட்டு அதன் முடிவுகள் பெறப்பட்டதன் பின்பே முடக்கம் தொடர்பாக தீர்மானம் எடுக்கப்படும்.
என பணிப்பாளர் தெரிவித்துள்ளார்.
No comments