Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஊர்காவற்துறை மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பில் பொலிஸார் விசாரணை!


ஊர்காவற்துறை பாடசாலை மாணவன் தாக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

ஊர்காவற்துறை பகுதியில் உள்ள பாடசாலை ஒன்றில் தரம் 09இல் கல்வி கற்பிக்கும் ஆசிரியை , தான் வகுப்பு வரும் போது மாணவன் எழுந்து "குட் மோர்னிங்" சொல்லவில்லை என தடியினால் அடித்த போது தடி கண்ணில் பட்டுள்ளது. அதானல் கண்ணில் வலி ஏற்பட்டு மாணவன் வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று இருந்தான்.  www.tamilnews1.com 

இது தொடர்பில் அறிந்த மாணவனின் தாயார் மறுநாள் பாடசாலைக்கு சென்று அதிபரை சந்திக்க நீண்ட நேரம் காத்திருந்தார். பாடசாலை முடிவடைந்த பின்னரே அதிபர் தாயாரை சந்தித்துள்ளார். www.tamilnews1.com 

தாயார் சந்தித்து விட்டு சென்ற பின்னர் அதிபர் மாணவனை அழைத்து , தாய்க்கு , ஆசிரியை அடித்த விடயத்தை ஏன் கூறினாய் என கேட்டும் , தாயை குறித்து அவதூறாக பேசியும் மாணவனை தாக்கியுள்ளார். 

இதனால் காயத்திற்கு உள்ளான மாணவன் யாழ்.போதனா வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றான்.  www.tamilnews1.com 

வைத்திய சாலை பொலிஸார் சம்பவம் தொடர்பில் மாணவனிடம் வாக்கு மூலம் பெற்று மேலதிக நடவடிக்கைகளுக்காக ஊர்காவற்துறை பொலிஸாருக்கு அனுப்பி வைத்துள்ளனர். அதனடிப்படையில் ஊர்காவற்துறை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். 

மாணவன் தாக்கப்பட்டமை தொடர்பிலான முழுமையான

No comments