Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழில் பொலிஸ் உத்தியோகஸ்தர் உள்ளிட்ட 7 பேருக்கு கொரோனா

யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர் ஒருவர் உள்பட மாவட்டத்தில் மேலும் 7 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை இன்று சனிக்கிழமை கண்டறியப்பட்டுள்ளது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.


யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் ஆய்வு கூடத்தில் 404 பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 12 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் நால்வருக்கும், சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் ஒருவருக்கும், (சுயதனிமைப்படுத்தலில் உள்ளவர்),  பருத்தித்துறை சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் இருவருக்கும், உடுவில் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு மற்றும் சண்டிலிப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவு ஆகியவற்றில் தலா ஒருவரும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் (இவர்கள் நால்வரும் சுயதனிமைப்படுத்தலில் இருந்தவர்கள்)

அதேவேளை யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது.

அத்துடன் முல்லைத்தீவு மாவட்டத்தில் இருவருக்கு கொரோனா தொற்று உள்ளமை கண்டறியப்பட்டது. அவர்கள் இருவரும் முல்லைத்தீவு வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்டவர்கள்” என்றும் வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்

No comments