யாழ்.மாநகர சபை முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டதும் ஆதரவாளர்கள் பலரும் ஆர தழுவி தமது மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். www.tamilnews1.com
யாழ்.மாநகர முதல்வர் சட்டத்தரணி வி.மணிவண்ணன் யாழ். நீதவான் நீதிமன்றில் நீதவான் ஏ.பீற்றர் போல் முன்னிலையில் முற்படுத்த தண்டனை சட்ட கோவையின் பிரிவு 120, 132 மற்றும் 143 ஆகியவற்றின் கீழ் மன்றில் முற்படுத்தப்பட்டார். www.tamilnews1.com
அதன் போது மணிவண்ணன் சார்பில் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ. சுமந்திரன் தலைமையில் பெண் சட்டத்தரணிகள் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட சட்டத்தரணிகள் முன்னிலையானார்கள். www.tamilnews1.com
அதேவேளை மணிவண்ணனை நீதிமன்றில் முற்படுத்தவுள்ளமை தொடர்பில் செய்திகள் வெளியானதை அடுத்து அவரின் ஆதரவாளர்கள் நீதிமன்றில் கூடி இருந்தனர். www.tamilnews1.com
வவுனியாவில் இருந்து அழைத்து வரப்பட்டு இரவு 8.30 மணியளவில் நீதிமன்றில் நீதவான் முன்னிலையில் மணிவண்ணன் முற்படுத்தப்பட்டார்.
அதனை தொடர்ந்து நடைபெற்ற வழக்கு விசாரணைகளை தொடர்ந்து மணிவண்ணனை நீதவான் 2 இலட்ச ரூபாய் பெறுமதியான சரீர பிணையில் விடுவித்ததுடன் , வழக்கினை எதிர்வரும் ஜூன் மாதத்திற்கு ஒத்திவைத்தார்.
நீதிமன்றினால் மணிவண்ணன் பிணையில் விடுவிக்கப்பட்டதை அடுத்து அப்பகுதியில் கூடியிருந்த மணிவண்ணன் ஆதரவாளர்கள் மகிழ்ச்சிகளை பகிர்ந்து கொண்டனர். www.tamilnews1.com
நீதிமன்ற வளாகத்தை விட்டு மணிவண்ணன் வெளிய வந்ததும் ஆதரவாளர்கள் கட்டித்தழுவி தமது மகிழ்ச்சிகளை வெளிப்படுத்தினர்.
No comments