Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொலம்பியாவில் கொவிட்-19 தொற்றினால் 25இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிப்பு!



கொலம்பியாவில் கொரோனா வைரஸ் (கொவிட்-19) பெருந் தொற்றினால், 25இலட்சத்துக்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

அண்மைய உத்தியோகபூர்வ புள்ளிவிபரங்களின் படி, கொலம்பியாவில் மொத்தமாக 25இலட்சத்து நான்காயிரத்து 206பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.

உலகளவில் கொவிட்-19 தொற்றினால் அதிக பாதிப்பினை எதிர்கொண்ட 12ஆவது நாடாக விளங்கும் கொலம்பியாவில், இதுவரை 65ஆயிரத்து 283பேர் உயிரிழந்துள்ளனர்.

கடந்த 24 மணித்தியாலத்தில் மட்டும் வைரஸ் தொற்றினால் 12ஆயிரத்து 125பேர் பாதிக்கப்பட்டதோடு 269பேர் உயிரிழந்துள்ளனர்.

தற்போதுவரை வைரஸ் தொற்றினால் பாதிக்கப்பட்ட 73ஆயிரத்து 357பேர் அங்குள்ள மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதில் இரண்டாயிரத்து 603பேர் தீவிர சிகிச்சை பிரிவில் உள்ளனர்.

அத்துடன் இதுவரை வைரஸ் தொற்றிலிருந்து 23இலட்சத்து 65ஆயிரத்து 566பேர் பூரண குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.

No comments