Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு வந்த சீனக் கப்பலால் பரபரப்பு


ஹம்பாந்தோட்டை துறைமுகத்திற்கு தற்காலிகமாக வந்துள்ள சீன கப்பலில் அணு சக்திக்கு பயன்படுத்தப்படும் யுரேனியம் இருப்பதாக இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் பணிப்பாளர் தெரிவித்தார்.

இவ்வாறான இரசாயன பொருட்களை நாட்டிற்கு கொண்டு வரும் போது, விசேட அனுமதி பெறப்பட வேண்டும் என்றாலும் குறித்த கப்பலுக்கு எவ்வித அனுமதியும் பெற்றப்படவில்லை எனவும் பணிப்பாளர் எச்.எல்.அனில் ரஞ்சித் தெரிவித்தார்.

எனவே ஹம்பாந்தோட்டை துறைமுகத்திலிருந்து கப்பலை வெளியேற்றுமாறு உரைமியாளர்களுக்கு பணிப்புரை விடுத்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டார்.

இதேவேளை ஹம்பாந்தோட்டையில் தற்காலிகமாக நிறுத்தப்பட்ட கதிரியக்க பொருட்கள் கொண்ட கப்பல் துறைமுகத்தை விட்டு வெளியேறியுள்ளதாக இராஜாங்க அமைச்சர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இலங்கை அணுசக்தி ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவிற்கு அறிவித்ததை அடுத்து கப்பலின் உரிமையாளர்களுக்கு முறையான வெளியேற்ற உத்தரவு வழங்கப்பட்டது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

கப்பல் மூலம் கடத்தப்படும் கதிரியக்க பொருளான ஹெக்ஸஃப்ளூரைட் என்ற பொருள் யுரேனியத்தை பதப்படுத்த பயன்படுகிறமை குறிப்பிடத்தக்கது.

No comments