Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

யாழ்ப்பாண பொலிஸார் மூவர் உள்ளிட்ட 12 பேருக்கு தொற்று!


யாழ்ப்பாணத்தில் மேலும் 12 பேருக்கு கோரோனா தொற்று உள்ளமை இன்று வெள்ளிக்கிழமை  கண்டறியப்பட்டுள்ளது என   வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.
 
யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை ஆய்வுகூடம் மற்றும் பல்கலைக்கழக மருத்துவ பீட ஆய்வு கூடம் என்பவற்றில் 636  பேரின் மாதிரிகள் இன்று பரிசோதனைக்கு உள்படுத்தப்பட்டன. அதில் 12 பேருக்கு தொற்று உள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. www.tamilnews1.com 
 
யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தை சேர்ந்த 3 பொலிஸ் உத்தியோகத்தர்களுக்கும் , யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சேர்க்கப்பட்ட  ஒருவருக்கும் , கோப்பாய் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் நால்வருக்கும், (கைதடி அரச திணைக்களம் ஒன்றின் அபிவிருத்தி உத்தியோகத்தராகக் கடமையாற்றுபவர் நேற்று தொற்றாளராக அடையாளம் காணப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் நால்வருக்கு தொற்று உள்ளமை இன்று உறுதிப்படுத்தப்பட்டது) நல்லூர் சுகாதார மருத்துவ அதிகாரி பிரிவில் மூவருக்கும் , (அவர்கள் திருநெல்வேலி பாரதிபுரம் தொற்றாளர்களுடன் தொடர்புடையவர்கள்)  யாழ்ப்பாணம் சிறைச்சாலையில் ஒருவருக்கும்  ஆக 12 பேருக்கு தொற்று உள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது என வடமாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர், மருத்துவர் ஆ.கேதீஸ்வரன் தெரிவித்தார்.

No comments