Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

கொரோனா தொற்றினால் மேலும் 5 மரணங்கள் பதிவு!


கொரோனா வைரஸ் தொற்றினால் மேலும் 5 மரணங்கள் பதிவாகியுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்று நோயியல் பிரிவு அறிவித்துள்ளது.

மட்டக்குளி, பாணந்துறை, இரத்தினபுரி, ஹொரண மற்றும் யாழ்ப்பாணம் ஆகிய பிரதேசங்களிலேயே இந்த மரணங்கள் பதிவாகியுள்ளதுடன், 85, 67 மற்றும் 90 வயதுடைய பெண்கள் மூவரும் 66 மற்றம் 59 வயதுடைய ஆண்களுமே இவ்வாறு உயிரிழந்துள்ளனர்.

இதனைடுத்து, நாட்டில் கொரோனா தொற்றினால் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 625 ஆக அதிகரித்துள்ளது.

இதேவேளை, நாட்டில் கடந்த 24 மணித்தியாலங்களில் 367 பேருக்கு கொரோனா தொற்று உள்ளமை உறுதி செய்யப்பட்டுள்ளது.

இதனையடுத்து நாட்டில் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 97 ஆயிரத்து 472 ஆகப் பதிவாகியுள்ளது.

அவர்களில் 93 ஆயிரத்து 547பேர் குணமடைந்து வீடுகளுக்குத் திரும்பியுள்ள நிலையில், தொற்றுக்கு உள்ளான 3 ஆயிரத்து 305 பேர் தொடர்ந்தும் வைத்தியசாலைகளில் சிகிச்சைப் பெற்று வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments