Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

வடமராட்சி கிழக்கில் அதிரடி படையினர் துப்பாக்கி சூடு - இருவர் படுகாயம்!

 




வடமராட்சி கிழக்கு பகுதியில் பொலிஸ் சிறப்பு அதிரடி படையினர் நடாத்திய துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி இருவர் படுகாயமடைந்த நிலையில் பருத்தித்துறை வைத்திய சாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

 
சட்ட விரோத மணல் கடத்தலை தடுக்கும் வகையில் வடமராட்சி கிழக்கு முள்ளி பகுதியில் பொலிஸ் விசேட அதிரடி படையினர் காவல் கடமையில் ஈடுபட்டிருந்தனர்.
 
அதன் போது சட்டவிரோத மணல் ஏற்றி வரும் வாகனங்கள் தப்பி செல்ல முடியாதவாறு ஆணிகள் இறுக்கப்பட்ட கட்டைகளை வீதியில் போட்டு இருந்துள்ளனர்
 
அதன் போது மணல் ஏற்றி வந்த வாகனத்தை மறித்த போது , அதனை ஓட்டி வந்தவர்கள் நிறுத்தாமல், ஆணிக்கட்டைகள் மீது ஏற்றி தப்பி செல்ல முற்பட்ட போது, அவர்கள் மீது பொலிஸ் விசேட அதிரடி படையினர் துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டுள்ளனர்.
 
அதன் போது வாகனத்தில் இருந்த துன்னாலை பகுதியை சேர்ந்த இருவர் துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயமடைந்துள்ளனர்.
 
படுகாயமடைந்தவர்களை அங்கிருந்து மீட்டு பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர்.
 
சம்பவம் தொடர்பில் பருத்தித்துறை பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.
 

No comments