முல்லைத்தீவு சாலை காட்டுப்பகுதியில் தமிழீழ விடுதலைப் புலிகளினுடைய ஆயுதங்கள் மீட்க்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் தெரிவித்தனர்.
முல்லைத்தீவு விமானப் படையின் தகவலுக்கு அமைய முன்னெடுக்கப்பட்ட தேடுதலிலேயே அவை மீட்கப்பட்டுள்ளன என்று பொலிஸார் குறிப்பிட்டனர்.
இரணைமடு வரைபடம், 910646 என்ற இலக்கமுடைய தகடு, தமிழன் குண்டு ஒன்று, தமிழீழ விடுதலைப் புலிகளின் தயாரிப்பான 4 குண்டுகள், ஆர்பிஜி மோட்டார் குண்டுகள் 5, 60 தர மோட்டார் குண்டுகள் 8, 81 தர மோட்டார் குண்டுகள் 3 மற்றும் கையெறி குண்டு ஒன்று என்பனவே மீட்கப்பட்டன.
அவற்றை செயலிழப்புச் செய்வதற்காக சிறப்பு அதிரடிப் படையினரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன என்றும் பொலிஸார் கூறினர்
No comments