யாழ்ப்பாண பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா வைத்திய நிபுணர்களின் கண்காணிப்பில் யாழ்.போதனா வைத்திய சாலையில் இருதய சத்திரசிகிச்சைப் பிரிவில், சிகிச்சை பெற்று வருகின்றார்.
அவருக்கு ஏற்பட்ட இந்த திடீர் மாரடைப்புத் தொடர்பில் இருதய குருதிக் குழாய் மருத்துவ சோதனைகள் முன்னெடுக்கப்படுகின்றன. அது தொடர்பான பரிசோதனையின் பின்பே இருதய சத்திரச்சிகிச்சை அல்லது உறைகுழாய் ( Stent ) வைப்பது தொடர்பில் முடிவு எடுக்கப்படும் என மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்படுகிறது. www.tamilnews1.com
நீரிழிவு நோய் கட்டுப்பாட்டை கவனிக்காது இருந்தமையாலும் இந்நிலைமை ஏற்பட்டு இருக்கலாம் எனவும் மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
பேராசிரியர் சி.சிறிசற்குணராசாவின் மருத்துவ சோதனைகள் மற்றும் உடன் சிகிச்சைகளை இருதய சத்திரசிகிச்சை வல்லுநர்களான வைத்தியர்களான லக்ஸ்மன் மற்றும் குருபரன் ஆகியோர் இணைந்து கண்காணித்து வருகின்றனர் .
No comments