கொழும்பு தேசிய வைத்திய சாலையில் கடந்த மூன்று மாத காலமாக அடையாளம் காணப்படாத 20 சடலங்கள் உள்ளன என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். www.tamilnews1.com
குறித்த சடலங்களில் ஒன்று பெண்ணினுடையது எனவும் , ஏனைய 19 சடலங்களும் ஆண்களுடையது என தெரிவித்த அதிகாரிகள் , குறித்த சடலங்கள் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்து உறவினர்களை அடையாளம் கண்டு அவர்களிடம் ஒப்படைக்க நடவடிக்கை எடுக்குமாறு பொலிசாரிடம் கூறியுள்ளதாகவும் , அடையாளம் காண முடியாத சடலங்களை அரச செலவில் அடக்கம் செய்வதற்குரிய நடவடிக்கைகளையும் எடுத்துள்ளதாகவும் தெரிவித்தனர். www.tamilnews1.com
No comments