முல்லைத்தீவு மாவட்டத்தில் முல்லைத்தீவு, புதுக்குடியிருப்பு மற்றும் முள்ளியவளை பொலிஸ் பிரிவுகள் இன்று இரவு 11.00 மணி முதல் மறு அறிவிப்பு வரை தனிமைப்படுத்துவதாக இராணுவத் தளபதி, சவேந்திர சில்வா அறிவித்துள்ளார். www.tamilnews1.com
அந்நிலையில் அப்பகுதியில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் கடமையில் ஈடுபட்டுள்ளனர்.
மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பல நூற்றுக் கணக்கான கோவிட்-19 நோய்த்தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டு வந்த நிலையில் இன்றைய தினம் 327 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. அந்நிலையிலையே இந்த முடக்கம் அறிவிக்கப்பட்டுள்ளது. www.tamilnews1.com
இதேவேளை, முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நாளை கடைப்பிடிக்க நீதிமன்றம் அனுமதியளித்த நிலையில் முள்ளிவாய்க்கால் நினைவு முற்றம் முல்லைத்தீவு பொலிஸ் பிரிவினுள் உள்ளடங்குகின்றமை குறிப்பிடத்தக்கது.









No comments