இலங்கையில் இன்று இதுவரையில் 2,659 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார். www.tamilnews1.com
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார். www.tamilnews1.com
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 125,936 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப் பட்டுள்ளது. www.tamilnews1.com
இதேவேளை, கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 1,365 பேர் இன்று (09) பூரணமாக குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
இதற்கமைய நாட்டில் இதுவரை கொரோனா தொற்றில் இருந்து பூரணமாக குணமடைந்தவர்களில் எண்ணிக்கை 104,463 ஆக அதிகரித்துள்ளது.
மேலும் கொரோனா தொற்றுக்கு உள்ளானவர்களில் மேலும் 15 பேர் உயிரிழந்ததை தொடர்ந்து உயிரிழப்பு 801ஆக உயர்வடைந்துள்ளது.
No comments