Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

மின்னல் தாக்கி 17 தோட்டத் தொழிலாளர்கள் பாதிப்பு!


நுவரெலியா,  கொட்டகலை டிரேட்டன் தோட்டத்தில் வேலை செய்து கொண்டிருந்திருந்த 17 தொழிலாளர்கள்  மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி, சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

நுவரெலியாவிலுள்ள பெரும்பாலான பகுதிகளில் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை முதல் தொடர்ச்சியாக  மழை பெய்து வருகின்றது.  ஆனாலும் தொழிலாளர்கள் அனைவரும் வழமைப்போன்று வேலைக்குச் சென்றுள்ளனர்.

இவ்வாறு டிரேட்டன் பகுதியிலுள்ள தொழிலாளர்களும் கொழுந்து பறித்து விட்டு, நண்பகல் 12 மணியளவில் அதனை பொதுவெளியில் வைத்து அளவிடுகையில்,   மின்னல் தாக்குதல் இடம்பெற்றுள்ளது.

இதில் 17 ஆண் தொழிலாளர்களும் மின்னல் தாக்குதலுக்கு இலக்காகி சுயநினைவை இழந்ததுடன் அதிர்ச்சியால் அவர்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாக அவர்களது உறவினர்கள் தெரிவித்தனர்.

No comments