நாடளாவிய ரீதியில் பயண தடை அமுலில் உள்ள நிலையில் வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞனை , மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது. www.tamilnews1.com
யாழ்ப்பாணம் தென்மராட்சி கரம்பகம் பகுதியில் இன்று வியாழக்கிழமை மதியம் குறித்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. www.tamilnews1.com
வீதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த இளைஞனை , மோட்டார் சைக்கிளில் வந்த கும்பல் ஒன்று வழிமறித்து வாள் வெட்டுத்தாக்குதலை மேற்கொண்டது. www.tamilnews1.com
அதில் கையில் காயமடைந்த இளைஞன் மோட்டார் சைக்கிளை வீதியில் கைவிட்டு விட்டு அபாய குரல் எழுப்பியவாறு தப்பியோடியுள்ளார். அதனை அடுத்து தாக்குதலாளிகள் அவ்விடத்தில் இருந்து தப்பி சென்றனர்.
சம்பவத்தில் காயமடைந்த இளைஞன் சாவகச்சேரி வைத்திய சாலையில் சிகிச்சை பெற்று வருகின்றார். www.tamilnews1.com
www.tamilnews1.com









No comments