Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

நினைவேந்தல்; திருத்திய கட்டளையை வழங்கியது நீதிமன்று!


பயங்கரவாதத்தை மீள் உருவாக்கும் வகையில் செயற்படாமலும் , சுகாதார நடைமுறைகளை கடைப்பிடித்தும் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலை மேற்கொள்ள முல்லைத்தீவு நீதவான் நீதிமன்று அனுமதி அளித்துள்ளது. 

கடந்த வியாழக்கிழமை முள்ளிவாய்க்கால் நினைவேந்தல் நிகழ்வுகளை நடாத்த தடை கோரி முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள 7 பொலிஸ் பிரிவுகள் நீதிமன்றில் விண்ணப்பம் செய்தனர். அதனை பரிசீலித்த நீதவான் நினைவேந்தல் நிகழ்வுகளுக்கு தடை விதித்து கட்டளை வழங்கியிருந்தார். 

இந்நிலையில் இன்றைய தினம் சட்டத்தரணிகள் , குறித்த கட்டளைக்கு எதிராக நகர்த்தல் பாத்திரம் அணைத்து , விண்ணப்பம் செய்தனர்.  அதனை அடுத்து, நீதவான் பயங்கரவாத செயற்பாடுகள் மீள் உருவாக்கும்  நடவடிக்கைகளை  மேற்கொள்ளாது , சுகாதார நடைமுறைகளை இறுக்கமாக கடைப்பிடித்து நினைவேந்தல் நிகழ்வினை மேற்கொள்ள அனுமதி வழங்கினார். 

No comments