சமூக ஊடக வலைப்பின்னல்களைப் பயன்படுத்தி தவறான பரப்புரை செய்ததற்காக கெலியோயா பகுதியில் உள்ள ஒருவரை குற்ற விசாரணைப் பிரிவு கைது செய்துள்ளது.
“சந்தேக நபரின் முகநூல் கணக்கை பரிசீலித்த காடுகளை அகற்றுவது தொடர்பாக பல்வேறு குற்றச்சாட்டுகள் அடங்கிய விளம்பரங்களை அவர் வெளியிட்டமை கண்டறியப்பட்டது. இருப்பினும், அனைத்து விளம்பரங்களிலும் பல்வேறு நபர்களின் தனியார் நிலங்களில் பற்றைகள் வெட்டும் போது எடுக்கப்பட்ட ஒளிப்படங்களே அவ்வாறு பதிவேற்றம் செய்யப்பட்டிருந்தது.
பொய்யான செய்தி பரப்பிய குற்றச்சாட்டில் அவர் கைது செய்யப்பட்டார்” என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர், அஜித் ரோகண தெரிவித்தார்.









No comments