நாடளாவிய ரீதியாக பயண கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டுள்ளது.
எதிர் வரும்31ஆம் திகதி வரையில் இரவு 11 மணி முதல் அதிகாலை 4 மணிவரையில் பயணிக்க கட்டுப்பாடுகள் விதிக்கப்ட்டுள்ளன.
அத்தியாவசிய தேவைகள் தவிர்ந்து ஏனைய தேவைகளுக்கு வீதிகளில் நடமாடவோ பயணிக்கவோ முடியாது என கொவிட் செயலணியின் தலைவர் இராணுவ தளபதி சவேந்திர சில்வா அறிவித்துள்ளார்.
இதேவேளை பயணக்கட்டுபாடுகளை மீறுபவர்களுக்கு எதிராக குற்றவியல் சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என பொலிஸ் பேச்சாளர் அறிவித்துள்ளமையும் குறிப்பிடத்தக்கது.
No comments