Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

{fbt_classic_header}

Breaking News

latest

சாணிக் குழிக்குள் விழுந்து குழந்தை உயிரிழப்பு - மஸ்கெலியாவில் சோகம்!


இரண்டரை வயது ஆண் குழந்தையொன்று கழிவு குழிக்குள் வீழ்ந்து பரிதாபகரமாக உயிரிழந்துள்ளது. 

மஸ்கெலியா பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரவுன்ஸ்வீக் தோட்டத்தின் ஜனதா டிவிசனில் இடம்பெற்ற இச் சம்பவத்தில், ஜெயசுந்தரம் சுலக்‌ஷனன் என்ற குழந்தையே உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

குறித்த குழந்தை திடீரென நேற்று மாலை முதல் காணாமல்போனதையடுத்து, அக்குழந்தையை தேடும் பணி முன்னெடுக்கப்பட்டிருந்தது. இதன்போது வீட்டுக்கு அருகில் பாதுகாப்பற்ற நிலையில் இருந்த சாணிக் குழியில் இருந்து குழந்தை சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளது.

சடலம் பிரேத பரிசோதனைக்காக மஸ்கெலியா வைத்தியசாலைக்கு கொண்டுசெல்லப்பட்டது. இச்சம்பவம் தொடர்பில் மஸ்கெலியா பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுவருகின்றனர்.

குழந்தையின் தாய் குருநாகல் பகுதியிலுள்ள வீடொன்றில் வீட்டுப் பணிப்பெண்ணாக பணியாற்றி வருவதாகவும், தந்தையின் அரவணைப்பிலேயே குழந்தை வளர்ந்துள்ளது எனவும் பிரதேச மக்கள் தெரிவித்தனர்.

No comments