தூக்குத் தண்டனைக் கைதி துமிந்த சில்வா ஜனாதிபதியின் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்யப்பட்டுள்ளார்.www.tamilnews1.com
இன்றைய பொசன் பௌர்ணமி தினத்தை முன்னிட்டு ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்சவினால் துமிந்த சில்வாவுக்கு பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது.
2011ஆம் ஆண்டு உள்ளூராட்சித் தேர்தலின் போது, முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பாரத லக்ஸ்மன் பிரேமச்சந்திர உள்ளிட்ட நான்கு பேர் சுட்டுப் படுகொலை செய்யப்பட்டனர்.www.tamilnews1.com
இந்த வழக்கை விசாரித்த கொழும்பு மேல் நீதிமன்றம், 2016ஆம் ஆண்டு முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த சில்வா உள்ளிட்ட நான்கு பேருக்கு தூக்குத் தண்டனை விதித்து தீர்ப்பளித்தது. இந்த தண்டனைக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மேன்முறையீடு செய்யப்பட்டது.
www.tamilnews1.com
மேன்முறையீட்டு மனுவை விசாரித்த ஐந்து நீதியரசர்களைக் கொண்ட அமர்வு , துமிந்த சில்வா உள்ளிட்ட மூவரின் தூக்குத் தண்டனையை உறுதிப்படுத்தியதுடன் அந்த வழக்கின் முதலாவது எதிரியை விடுதலை செய்து உத்தரவிட்டது.www.tamilnews1.com
www.tamilnews1.com







No comments