Sticky Sidebar

TURE

Page Nav

HIDE

Top Headline

SHOW

Grid

LIST_STYLE

Pages

Breaking News

latest

பயணத்தடை அமுலில் உள்ள காலங்களில் திருட்டில் ஈடுபட்டு வந்த சந்தேகநபர்கள் கைது!


பயணத்தடை அமுலில் உள்ள நிலையில் வீட்டினுள் புகுந்து மடிக்கணனி , கைத்தொலைபேசி மற்றும் துவிச்சக்கர வண்டியை திருடிய குற்றச்சாட்டில் இரண்டு இளைஞர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். 

கடந்த சில தினங்களுக்கு முன்னர் கச்சேரி - நல்லூர் வீதியில் உள்ள வீடொன்றின் ஜன்னலை உடைத்து உள்புகுந்த திருடர்கள் வீட்டினுள் இருந்த  மடிக்கணனி , கைத்தொலைபேசி மற்றும் துவிச்சக்கர வண்டியை திருடி சென்றிருந்தனர். 

சம்பவம் தொடர்பில் வீட்டின் உரிமையாளரால் யாழ்ப்பாண பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டது. முறைப்பாட்டின் பிரகாரம் விசாரணைகளை முன்னெடுத்த பொலிஸார், குருநகர் மற்றும் சாவகச்சேரி பகுதிகளை சேர்ந்த  இரண்டு சந்தேக நபர்களை கைது செய்துள்ளனர். 

கைது செய்யப்பட்ட இருவரையும் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைத்து விசாரணைகளை முன்னெடுத்த போது , அவர்கள் மேலும் ஒரு வீட்டில் திருடிய குற்றத்தையும் ஒப்புக்கொண்டுள்ளனர். 

கைது செய்யப்பட்டவர்களிடம் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளின் அடிப்படையில் அவர்களினால் திருடப்பட்ட இரண்டு மடிக்கணனிகள்  , இரண்டு கையடக்க தொலைபேசிகள்  , இரண்டு துவிச்சக்கர வண்டிகள் மற்றும் 50 ஆயிரம் ரூபாய் பணம் என்பன மீட்கப்பட்டுள்ளன

No comments