தனது 5 வங்கி கணக்குகளில் 06 பில்லியன் ரூபாய் பண பரிமாற்றங்களை மேற்கொண்டு வந்த 41 வயதுடைய பெண்ணொருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த பெண்ணுக்கு சொந்தமான 5 வங்கி கணக்குகளில் 06 பில்லியன் ரூபாய் பண பரிமாற்றம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. அது தொடர்பில் விசாரணைகளை முன்னெடுத்த குற்றப்புலனாய்வு பிரிவினர் அப்பெண்ணை கைது செய்துள்ளனர்.
நான்கு வருட கால பகுதியில் தனக்கு சொந்தமான 5 வங்கி கணக்குகளின் ஊடாக குறித்த பண பரிமாற்றத்தை மேற்கொண்டு வந்துள்ளார் எனவும் , போதை பொருள் வர்த்தகம் ஊடாகவே அப்பணம் கிடைக்கப்பெற்று இருக்கலாம் எனவும் சந்தேகிக்கப்படுகிறது.
No comments