பொலிஸ் அதிகாரிகள் என தெரிவித்து பல்வேறு கொள்ளைச் சம்பவங்களுடன் தொடர்புடைய மூவர் வத்தள பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.குருணாகல் மற்றும் வத்தள பகுதியை சேர்ந்தவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
அவர்களிடம் இருந்து போலி அடையாள அட்டைகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
குறித்த நபர்கள் 17 கொள்ளை சம்பவங்களுடன் தொடர்புடையவர்கள் என பொலிஸ் ஊடகப் பேச்சாளரும் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமான அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
No comments